Published : 27 Apr 2017 05:06 PM
Last Updated : 27 Apr 2017 05:06 PM

யூடியூப் பகிர்வு: கேழ்வரகில் தயாரிக்கப்படும் பெங்களூரு பீர்!

பெங்களூருவில் இயற்கை முறையில் விளைந்த கேழ்வரகைக் கொண்டு பீர் தயாரிக்கப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அங்கு கேழ்வரகைக் கொண்டு பீர் தயாரிக்கப்படுகிறது. இதைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பெங்களூரு பீர் சங்க தலைமை பணியாளர் ரோஹித்.

''70% கேழ்வரகு மற்றும் 30% பார்லி கொண்டு இந்த பீர் உருவாக்கப்படுகிறது. இனிப்புக்காக வெல்லத்தையும் இதில் சேர்க்கிறோம்'' என்கிறார்.

கேழ்வரகு மற்றும் இதர தானியங்கள் கொண்டு பீர் தயாரிக்கப்படுவது முதல்முறையல்ல. பண்டைய காலங்களில் ஆப்பிரிக்க நாடுகளிலும், நேபாள் மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் இந்த முறை வழக்கத்தில் இருந்தது.

பொதுவாகவே வெளிநாட்டு பானமான பீரில், இந்தியச் சுவையைப் புகுத்த பழங்கள், காய்கறிகள், நறுமணப் பொருட்களைக் கொண்டு பீர் தயாரிக்கப்படுகிறது.

இதுகுறித்த சுவாரஸ்யமான தொகுப்பைக் காண: