Last Updated : 10 May, 2017 10:46 AM

 

Published : 10 May 2017 10:46 AM
Last Updated : 10 May 2017 10:46 AM

தேநீர் கவிதை: வழிப்போக்கன்

நான் வழிப்போக்கன்

வழிகள்

என் முகவரிகள்

*

மழையில்

நனைவது

எப்போதும் இருக்கும்

மழை நீர்

அருந்துவது

எனக்குப் பிடிக்கும்

*

இளைப்பாறும் போதெல்லாம்

நான் நிழலுடன்

பேசுகிறேன்

மனம் மரத்துடன்

பேசுகிறது

*

என் பயணம்

அடைதலில் இல்லை

தொடர்தலில் இருக்கிறது

*

‘வெகுதூரம்

வந்த பின்னும்

வெகுதூரம்

இருக்கு இன்னும்’

இந்த வரி

அதிகம்

உறங்க விடுவதில்லை

*

வேகமான நடையில்

இமை மூடித் திறக்க

முடிகிறது தூக்கம்

*

கால்களுக்கிடையில்

முடிகின்றன‌

நெடும் பயணத்தின்

சிறு பயணங்கள்

*

காதுகளை நிரப்புகிறது

காற்றின் பாடல்

அதில் நான்

கலந்துபோன

ஒரு சொல்

*

கை வீசி நடக்கிறேன்

பிரபஞ்சத்தைப்

பின்னுக்குத் தள்ளி,

பிரபஞ்சத்தோடு

கை கோர்த்து

பிரபஞ்சத்தை

எதிர்கொண்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x