Published : 10 May 2015 10:51 AM
Last Updated : 10 May 2015 10:51 AM

ட்விட்டரில் அன்னையர் தினம் போற்றும் தமிழ்ப் பிள்ளைகள்

உலக அளவில் பல்வேறு அம்சங்களை அடிப்படையாக வைத்துப் பல்வேறு தினங்கள் கொண்டாடப்படுகின்றன. உடல் நலம் குறித்த விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவை தவிர, அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் முதலான பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

இவற்றில் அன்னையர் தினத்துக்கு மட்டும் ஒரு வித்தியாசமான தன்மை உள்ளது. இது ஒவ்வோர் ஆண்டும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (மே 10) அன்னையர் தினம்!

ட்விட்டரில் >#அன்னையர்தினம்

ட்விட்டரில் #அன்னையர்தினம் என்ற ஹேஷ்டேக்கில் தமிழ் இணையவாசிகள் அன்னையின் மகத்துவத்தைப் பறைசாற்றும் வகையில் பதிவுகளைத் தமிழில் இட்டு வருகின்றனர். நிமிடத்துக்கு 10-க்கும் மேற்பட்ட குறும்பதிவுகள் பதிவான நிலையில், > #அன்னையர்தினம் என்ற ஹேஷ்டேக், ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

அன்னையர் தினம் - ஒரு நெகிழ்ச்சி வரலாறு:

அன்னையர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுவதன் காரணம் என்ன? அன்னையை ஆராதிக்கும் கொண் டாட்டங்கள் பண்டைய காலத்தில் கிரேக்கத்தில் இருந்தன. வசந்த காலத்தின் தொடக்கத்தை அவர்கள் தாய் தெய்வத்தை வணங்கியே கொண் டாடினார்கள். ரோமர்கள் 'சைபெலி' என்ற பெண் தெய்வத்தைத் தாயாகக் கருதி வழிபட்டனர். கிறிஸ்துவத்தின் வருகைக்குப் பின்பு இந்தக் கொண்டாட்டம் 'மாதா' திருக்கோயி லுக்கு மரியாதை செய்வதாக மாறியது. இவை எல்லாமே சமய அடிப்படையில் உருவானவை. ஆனால் நவீன உலகில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' அப்படி அல்ல.

அமைதியை நாடிய சமூக சேவகி

அனா ஜார்விஸ் என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் 'கிராப் டன்' என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது அங்கு நடந்த யுத்தத்தில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங் கள் சிதறி சீரழிந்தன. பிரிந்த குடும்பங் கள் ஒன்றுசேரவும், போர் இல்லாத சமாதானம் நிலவவும் அனா ஜார்விஸ் கடுமையாக போராடினார். அவருடைய மகளுக்குப் பார்வை கிடையாது. ஆனால், தன் சொந்த சோகத்தைப் பொருட்படுத்தாமல் இறுதிவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904-ம் ஆண்டில் மறைந்தார் ஜார்விஸ்.

அனா ஜார்விஸின் மகள் அன் ரீவ்ஸ் ஜார்விஸ் தன் தாயின் நினை வாக உள்ளூரில் இருந்த ஒரு தேவா லயத்தில் 1908-ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று 'சிறப்பு வழிபாடு' ஒன்றை நடத்தி னார். தன் தாயாரின் நினைவை போற்றி யதைப் போலவே, எல்லோரும் அவர வர் அன்னையை கவுரவிக்க வேண் டும் என்று அவருக்குத் தோன்றியது.

அன்னையின் அடிச்சுவட்டில்

1913-ம் ஆண்டு வேலை நிமித்த மாக அன் ரீவ்ஸ் ஜார்விஸ் பென்சில் வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல் பியாவில் குடியேறினார். பார்வையற்ற வரான அவருக்குத் தன் தாயைப் போலவே சமூக சேவையின் மீது அள வற்ற நாட்டம் இருந்தது. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டார்.

அன்னையைப் போற்றுவது குறித்த தனது எண்ணத்தை அவர் பென்சில் வேனியா மாநில அரசுக்குத் தெரிவித் தார். அரசாங்கமும் அவருடைய கருத்தை ஏற்று 1913-ம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீ கரித்து அறிவித்தது.

அதன் பிறகு, அமெரிக்கா முழு வதும் 'அன்னையர் தினம்' கொண் டாடப்பட வேண்டும், அந்த நாளை அரசின் 'விடுமுறை' நாளாக அறி விக்க வேண்டுமென அப்போது அமெரிக்க அதிபராக இருந்த உட்ரோ வில்சனுக்கு வேண்டுகோள் விடுத் தார். அரசியல்வாதிகளுக்கும், தன் னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி ஆதரவு கோரினார். அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் இதை ஏற்றுக் கொண்டார். ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரபூர்வ அன்னையர் தினமாக அறிவித்தார்.

பிறகு கனடா அரசும் இதனை அங்கீகரித்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளை 'அன்னையர் தினம்' என அறிவித்து நடைமுறைப்படுத்தின.

அன்னையர் தினக் கொண்டாட் டங்கள் ஒரு கட்டத்தில் வணிகமயமாக மாறின. பணம் சம்பாதிப்பதற்கான உத்தியாக இதைப் பல அமைப்புகள் பயன்படுத்திக்கொண்டன. அன்னை யின் உருவம் பொறித்த கொடிகள் விற்கப்பட்டன. இந்தக் கொடி விற் பனையை எதிர்த்து அன் ரீவ்ஸ் ஜார்விஸ் 1923-ல் ஆண்டு வழக்கு தொடர்ந் தார். "அன்னையர் தினம் உணர்ச்சி பூர்வமான நாளாகவே இருக்க வேண் டும். பணம் சேர்க்கும் நாளாக இருக்கக் கூடாது" என்று வாதாடி வென்றார்.

தனது 84வது வயதில் அன் ரீவ்ஸ் ஜார்விஸ் மறைந்தார். "உலகம் முழுவதும் அன்னையர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் விளங்க வேண்டும்" என்று தன் கடைசி ஆசையை வெளிப்படுத் தியிருந்தார்.

தன் அன்னையின் சுவடு களைப் பின்பற்றிச் சமூக சேவையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த அன் ரீவ்ஸ் ஜார்விஸின் ஆசை பூர்த்தியாகும் விதமாக ஆண்டுதோறும் உலகம் முழுவதும்அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x