Published : 24 Oct 2014 12:38 PM
Last Updated : 24 Oct 2014 12:38 PM

ஹரியாணா: ரூ.132 கோடி மின் கட்டணம், பான் மசாலா கடைக்காரர் அதிர்ச்சி

ஹரியாணா மாநிலத்தில் பான் மசாலா விற்பனை செய்யும் கடைக்காரர் ஒருவருக்கு ரூ.132.29 கோடி மின் கட்டணம் செலுத்துமாறு மின் வாரியம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம் சோனியாபேட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அப்பகுதியில் ஒரு சிறிய பான் மசாலா கடை நடத்தி வருகிறார். அவருக்கு அக்டோபர் மாதத்திற்கான மின் கட்டணத்தை அம்மாநில மின்வாரியம் அனுப்பியது. அதில் அவர் அக்டோபர் மாத மின் பயன்பாட்டிற்கு ரூ.ரூ.132.29 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அந்த பான் மசாலா வியாபாரி இதை ஊடகங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார். மின் கட்டணம் பதிவு செய்யும் ரசீதில், வார்த்தைகளாலும் ரூ.132.29 கோடி அச்சிடப்பட்டிருந்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சிறிய கடைக்கு எப்படி ரூ.132.29 கோடி மின் கட்டணம் வரும் என ஆச்சரியத்தில் உள்ளார் ராஜேஷ்.

ஹரியாணா மாநிலத்தில், இதுபோன்று தவறான மின் கட்டணம் பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஏற்கெனவே கடந்த 2007-ல் நடந்துள்ளது. அப்போது, முரளி லால் என்பவருக்கு ரூ.234 கோடி மின் கட்டணம் விதித்திருந்தது மின் வாரியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x