Published : 26 Mar 2017 12:21 PM
Last Updated : 26 Mar 2017 12:21 PM

வீட்டில் திருடப் போவதாக வாட்ஸ்-அப்பில் தகவல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் வேப்பகுண்டா ராமர் கோயில் தெருவில் வசித்து வருகிறார் ஒரு கல்லூரி மாணவி. இவரது செல்போனுக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில், “உங்கள் வீட்டில் நாங்கள் திருடப் போகிறோம். சந்தேகம் இருந்தால் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் சில அடையாங்களை வரைந்துள்ளோம். போய் பார். ஜாக்கிரதை” என கூறப்பட்டிருந்தது. உடனடியாக அவர்கள் தங்களது வீட்டு மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு செல்போனில் குறிப்பிட்ட சில அடையாளங்கள் இருந்தன. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனிடையே, இந்த தகவல் அந்தப் பகுதி முழுவதும் பரவியது. உடனடியாக பொதுமக்கள் அவரவர் வீட்டு மொட்டை மாடிகளுக்குச் சென்று பார்த்தனர். அப்போது மேலும் இரண்டு வீட்டு மாடிகளில் சில அடையாளங்கள் வரையப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x