Last Updated : 28 Nov, 2014 03:16 PM

 

Published : 28 Nov 2014 03:16 PM
Last Updated : 28 Nov 2014 03:16 PM

மொய் விருந்து நடத்தி கட்சிக்கு 91 லட்சம் திரட்டிய ஆம் ஆத்மி

டெல்லியில் மொய் விருந்து நடத்தி அதன் மூலம் கட்சிக்கு சுமார் ரூ.91 லட்சம் நிதி திரட்டியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியில் தங்களது கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு நடத்தப்பட்ட மொய் விருந்தில் ரூ.91 லட்சம் பெறப்பட்டதாகவும். இதில், ரூ,36 லட்சம் நேரடி நன்கொடையாகவும் மீதம் காசோலை மற்றும் கட்சி உறுப்பினர்களின் மூலமும் திரட்டப்பட்டதாகவும் அந்த கட்சியின் முக்கிய தலைவர் ப்ரீத்தி ஷர்மா தெரித்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக பெங்களூருவில் நிதி திரட்டுவதற்கான மொய் விருந்து நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x