Published : 27 Jan 2015 10:07 AM
Last Updated : 27 Jan 2015 10:07 AM

பெயர் பொறித்த ஆடையுடன் ஒபாமாவை சந்தித்த மோடி: சமூக வலைதளங்களில் கிண்டல்

ஆடை அணிவதில் மோடி செலுத் தும் கவனத்தை வெளிநாட்டு ஊடகங்களும் பாராட்டுவதுண்டு. இந்நிலையில் நேற்று முன் தினம் ஒபாமாவை மோடி சந்திக்கும் போது, இளஞ்சிவப்பில் மெல்லிய கோடுகள் கொண்ட சூட் அணிந் திருந்தார்.

பிரதமரின் படங்களை பெரிது படுத்தி பார்க்கும்போது, இளஞ் சிவப்பு கோடுகள் முழுவதும் ‘நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என்று எழுத்துகள் பொறிக்கப் பட்டிருந்தன. இந்த குளோசப் படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவின. கூடவே கிண்டல் செய்தும் பதிவு கள் வெளியாகின. “மோடி தனது ஆடையை யாராவது திருடி விடுவார்கள் என்று பயப் படுகிறாரா?” என்றும் “மோடி சண்டைக்குச் செல்வதாக அவரது ஆடை வடிவமைப்பாளர்கள் கருதி விட்டனரா?” என்றெல்லாம் பதிவுகள் வெளியாகின.

ஒபாமாவை டெல்லி விமான நிலையத்தில் குர்தா மற்றும் சால்வை அணிந்து வரவேற்ற மோடி, பின்னர் ஒபாமாவை இரண் டாவது முறையாக சந்திக்கும்போது இந்த ஆடை அணிந்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு விருந்தின்போது மோடியிடம், ஒபாமா தானும் குர்தா அணிவது குறித்து யோசிப்பதாக கூறி கலகலப் பூட்டினார். ஆடையில் பெயர் பொறித்துக்கொண்ட முதல் தலைவர் அல்ல மோடி. இதற்கு முன் முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தனது ஆடை கோடுகளில் தனது பெயரை பொறித் துக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x