Published : 31 Oct 2014 02:43 PM
Last Updated : 31 Oct 2014 02:43 PM
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் வழக்கில் நிலக்கரித் துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலர் எச்.சி.குப்தா உள்பட 3 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நிலக்கரித் துறை செயலர் எச்.சி.குப்தா, அப்போது இணைச் செயலராக இருந்த கே.எஸ்.குரோபா மற்றும் இயக்குனர் கே.சி.சமாரியா ஆகியோருக்கு கோர்ட் சம்மன் அளித்திருந்தது.
நீதிமன்றத்தில் ஆஜாரகிய ஐவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பரசார் ஐவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நிலக்கரி சுரங்க முறைகேட்டில், நிலக்கரித் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை சட்டவிரோதமான முறையில் செய்துள்ளனர் என்பது குற்றச்சாட்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT