Published : 05 Mar 2015 07:54 PM
Last Updated : 05 Mar 2015 07:54 PM

தெலுங்கானா: அதிலாபாத் ரயில் நிலையத்தில் திடீரென எரிந்து கருகிய ரயில் பெட்டி

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அதிலாபாத் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றின் பெட்டி எரிந்து சாம்பலானது பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. காரணம் அந்த ரயில் அப்போது காலியாக நின்று கொண்டிருந்தது.

அதிகாலை 2.45 மணியளவில் ஒரு பெட்டி திடீரென தீப்பிடித்து ஏரியத் தொடங்கியது. அதிலாபாத்-பார்லி பாசஞ்சர் ரயிலான இது இன்னும் 90 நிமிடங்களில் புறப்பட இருந்த ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனே தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அதாவது சுமார் 40 நிமிடங்கள் ஆகியுள்ளது தீயை அணைக்க.

அதன் பிறகு இன்று காலை 5.40 மணிக்கு இந்த பாசஞ்சர் ரயில் புறப்பட்டுச் சென்றது.

தெற்கு மத்திய ரயில்வே அதிகாரிகளும், காவல்துறையினரும் இந்த திடீர் தீ-யிற்கு காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x