Published : 27 Jan 2015 10:25 AM
Last Updated : 27 Jan 2015 10:25 AM
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள், மத்திய துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
ஆனால், மேற்கு வங்கம், பிஹார், தமிழ்நாடு, ஒடிஸா, கேரளம், பஞ்சாப், டெல்லி, நாகாலாந்து உள்ளிட்ட 13 மாநிலங்களின் ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. இம்மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பலமுறை வலியுறுத்தியும் தங்கள் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக, மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
அணிவகுப்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து கூறும் போது, மாநிலத்தின் கலாச்சாரம், பொருளாதாரம், வரலாறு ஆகியவற்றை விரிவாக விளக்கும் வகையில் ஊர்தி அமைய வேண்டும். குறிப்பிட்ட ஒரு திட்டத்தை (கன்யாஸ்ரீ திட்டம்) மட்டும் விளக்குவதாக இருந்ததால்தான் மேற்கு வங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.
ஒடிஸா மாநிலத்தின் ஊர்தி தெளிவாக தனது கருத்தை விளக்கும் வகையில் இல்லாததால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்காததற்கான காரணம் குறித்து தகவல் இல்லை.
பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிற்பம், கல்வேலைப்பாடுகள் நடப்பாண்டுக்கான மையக்கருவாக தேர்வு செய்யப்பட்டது. அந்தத் தரத்தை நிறைவு செய்யும் விதத்தில் ஊர்திகளை அனுப்பவுதற்கு பல மாநிலங்களுக்கும் போதிய விருப்பம் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT