Published : 25 Mar 2017 11:24 AM
Last Updated : 25 Mar 2017 11:24 AM

டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; ஒருவர் பலி

டெல்லியின் நரேலா பகுதியில் இயங்கிவரும் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் ஒருவர் பலியானார்; மற்றொருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறும்போது, ''வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 12.10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அழைப்பு வந்தது. உடனே 24 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

9 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகே, தீ அணைக்கப்பட்டது'' என்றனர்.

காவல்துறை தரப்பில் கூறியதாவது: விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள். தீ விபத்து பகல் நேரத்தில் நடந்திருந்தால் சேதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x