Published : 23 Jan 2017 04:25 PM
Last Updated : 23 Jan 2017 04:25 PM
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடினார் என்னும் செய்தி பொய்யானது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் நிர்மலா சீதாராமன் கூறியது:
''சில நிமிடங்களுக்கு முன்னர்தான் மேனகா காந்தியுடன் தொலைபேசியில் பேசினேன். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார் என்பது தவறான செய்தி. தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் தவறானவை'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT