Published : 29 Apr 2016 03:56 PM
Last Updated : 29 Apr 2016 03:56 PM
ஓபிசி பிரிவில் சேர்க்கக் கோரி போராட்டம் செய்து வரும் ஹர்திக் படேல் தலைமையிலான படிதார் ஆந்தோலன் சமிதி, குஜராத் அரசு உயர்சாதியினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்காக 10% இடஒதுக்கீடு வழங்கியுள்ளதை ஏற்க மறுத்துள்ளது.
குஜராத் அரசு இன்று உயர்சாதிப் பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.6 லட்சம் வரை உள்ளவர்கள் இதில் பயனடையலாம்.
ஆனால், மற்றொரு போராட்டப் படேல் குழுவான சர்தார் படேல் குழு அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளது. ஆனாலும் இது படேல் சமூகத்தினருக்கு எப்படி, எந்த அளவுக்கு உதவி புரியும் என்பதை பொறுத்திருந்து பார்ப்பதாகக் கூறியுள்ளது.
ஜாட் சமூகத்தினருக்கு ஹரியாணா செய்தது போல் தனியாக இட ஒதுக்கீடு அல்லது ஓபிசி பிரிவில் சேர்க்கக் கோரியிருந்த படிதார் அனமாத் ஆந்தோலம் சமிதி செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் படேல் கூறும்போது, “பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கான இந்த 10% இட ஒதுக்கீடு வெறும் லாலிபாப் என்பது தவிர வேறில்லை.
ஹர்திக் படேலும் இதைக் கேட்கவில்லை, எனவே நாங்கள் இந்த தீர்வை ஏற்றுக் கொள்ள முடியாது, இது பாஜக அரசின் தந்திரம். படேல் சமூகத்தினரை மவுனப்படுத்தும் செயல். எங்களை இந்த அறிவிப்பு ஒன்றும் செய்யாது. பாஜக அரசு இத்தகைய அரசியல் செய்வதற்கான விளைவுகளைச் சந்திக்கவே செய்யும். இந்த அறிவிப்புக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT