Published : 31 Jan 2015 02:52 PM
Last Updated : 31 Jan 2015 02:52 PM

கிரண் பேடியை விட ஷாஸியா இல்மி அழகானவர்: கட்ஜூவின் ட்விட்டர் கருத்தால் சர்ச்சை

டெல்லி முதல்வர் வேட்பாளராக ஷாஸியா இல்மியை நிறுத்தினால், தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றிபெறும், ஏனென்றால் கிரண் பேடியைவிட ஷாஸியா இல்மி அழகானவர் என்று மார்கண்டேய கட்ஜூஅவரது ட்விட்டரில் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவர் மார்கண்டேய கட்ஜூ இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "கிரண் பேடியைவிட ஷாஸியா இல்மி அழகானவர். அவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால், பாஜக நிச்சயம் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி.

குரேஷியா நாட்டுத் தேர்தலில் அழகானவர்கள் தான் அதிகமாக தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. எனவே டெல்லியிலும் அழகான ஷாசியா இல்மியை வேட்பாளராக பாஜக நிறுத்தினால், வாக்களிக்க விரும்பாத என்னை போன்றவர்களும் கூட, வாக்களிக்க நிச்சயம் முன்வருவோம்" என்று தெரிவித்தார்.

கட்ஜூவின் இந்த கருத்துக்கு ட்விட்டர் பக்கத்தில் மிகப் பெரிய எதிர்வினை வந்துகொண்டிருக்கிறது. அவரது கருத்து மிகவும் ஆபாசமான ஒன்றாக இருப்பதாக ட்விட்டரில் கடுமையான எதிர்ப்பு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு சர்ச்சைக்கு இட்டுச் சென்றுள்ளது.

சர்ச்சையை தொடர்ந்து கட்ஜூ தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறும்போது, "உங்கள் அனைவரது பிரச்சினை என்னவென்று தெரியவில்லை. என்னைப் போன்ற வயதானவர்கள் அழகை ரசிக்கக் கூடாதா என்ன?

ஒரு அழாகான பூவை நாம் ரசிப்பதாக கூறும்போது, அதனை நாம் பறிக்க நினைக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. தோட்டத்தில் இருக்கும் பூவை தூரத்தில் இருந்து ரசிப்பதில் தவறில்லை. தோட்டத்துக்குள் அத்துமீறினால் தான் தவறு.

அது போலதான், நான் அந்த பெண்ணின் அழகை ரசிப்பதாக கூறுகிறேன். அவரை குறித்து தவறாக பேசவில்லை. உரிமை எடுத்துக்கொண்டும் நடக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x