Published : 23 Aug 2014 09:31 AM
Last Updated : 23 Aug 2014 09:31 AM

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இருவர் பலி; 7 பேர் படுகாயம்- பீதியில் கிராமவாசிகள் வெளியேறினர்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உள்பட இரண்டு பேர் பலியாகினர். 13 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கடும் தாக்குதல்ல் ஈடுபட்டனர்.

இதில், முகமது அக்ரம், அவரது மகன் அஸ்லாம் (13) ஆகிய இருவரும் பலியாகினர். அக்ரமின் மனைவி, 3 குழந்தைகள், எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் ஜம்மு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக எல்லை பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்: அர்னியா துணை செக்டாரில், சர்வதேச எல்லையில் 17 அவுட்போஸ்ட்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

வெளியேறும் கிராமவாசிகள்:

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையோரத்தில் உள்ள 3 கிராமங்களில் இருந்து 2000 கிராமவாசிகள் வெளியேறியுள்ளனர். உயிரை காப்பாற்றிக் கொள்ள உடைமைகளையும், கால்நடைகளையும் விடுத்து தப்பிச் சென்றனர்.

அவசரகதியில் கிராமங்களை விட்டு வெளியேறிய மக்களை அரசு பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x