Published : 28 Jun 2017 01:24 PM
Last Updated : 28 Jun 2017 01:24 PM
உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுணர்வுக்கு உண்டான சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் இன்று (புதன்கிழமை) தரப்பில், ''உத்தரப் பிரதேசத்தின் பன்ஸ்தி நகரத்தைச் சேர்ந்த 14 வயது தலித் சிறுமி ஒருவர் அதே பகுதியை அஜய் பஸ்வான் என்ற இளைஞரால் கடத்தப்பட்டுள்ளார். அதன்பின் அந்த சிறுமியை பஸ்வான் உட்பட மூன்று இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர். பஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேலும் நடந்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT