Published : 14 Jun 2016 08:09 AM
Last Updated : 14 Jun 2016 08:09 AM
மத்தியப் பிரதேசத்தில் ஈவ் டீசிங் செய்த இசை ஆசிரியரை மாணவிகள் கும்பலாக சேர்ந்து அடித்து உதைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. | வீடியோ இணைப்பு கீழே |
மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சர் நகரைச் சேர்ந்தவர் நிரஞ்சன் பட்னாகர் (63). அவர் அப்பகுதியில் இசைப் பள்ளி நடத்தி வருகிறார். அவரிடம் ஏராளமான மாணவ, மாணவிகள் இசை பயின்று வருகின்றனர்.
தனது இசைப் பள்ளிக்கு வரும் மாணவிகளை நிரஞ்சன் பாலியல்ரீதியாக துன்புறுத்தி யதாகக் கூறப்படுகிறது. மேலும் மாணவிகளிடம் அநாகரிகமாக பேசி ஈவ் டீசிங்கில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவிகள் நேற்று அவரை கும்பலாக சேர்ந்து அடித்து உதைத்தனர். மாணவிகளிடம் இருந்து தப்பிக்க அவர் சாலைக்கு ஓடிவந்தார். ஆனால் அங்கேயும் அவரை விரட்டி வந்த மாணவிகள் அவரது ஆடைகளை கிழித்து சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆசிரியரை மீட்டனர்.
இதுதொடர்பாக இருதரப்பி னரும் போலீஸில் புகார் அளித் துள்ளனர். மாணவிகள் அளித் துள்ள புகாரில், மிக நீண்ட கால மாக ஆசிரியர் நிரஞ்சன் தங்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தார் என்று குற்றம் சாட்டியுள்ள னர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆசிரியர் நிரஞ்சன் மறுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், என்னிடம் படிக்கும் மாணவிகளை பேரக் குழந்தைகள் போலவே நடத்தினேன். குறிப் பிட்ட சில மாணவிகள் கட்ட ணத்தை செலுத்தவில்லை. அவர் களிடம் பணம் கேட்டபோது அடித்து உதைத்தனர் என்று தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து மண்ட்சர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங் பரிகார் கூறிய போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் அநாகரிகமான வார்த்தைகளை பேசியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் விசாரித்து வருகிறோம். அதற்கேற்ப நட வடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்தார்.
பரவும் வீடியோ
இசை ஆசிரியர் நிரஞ்சனை மாணவிகள் அடித்து உதைத்த காட்சிகளை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ யூ-டியூப் உட்பட பல்வேறு சமூக வலைதளங்களில் அதிவேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT