Published : 29 Aug 2014 10:10 AM
Last Updated : 29 Aug 2014 10:10 AM

இந்தியாவில் நாள்தோறும் 20 சிறுவர்கள் விபத்தில் பலி

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 20 சிறார்கள் சாலை விபத்து களில் பலியாவதாக தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரம் கூறுகிறது.

உலகில் பெரும்பாலான நாடுகளில் குழந்தை கள் பாதுகாப்பு சட்டம் அமலில் உள்ளது. ஆனால் இந்தி யாவில் அதுபோன்ற சட்டங்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவண புள்ளி விவ ரத்தின்படி இந்தியா முழுவதும் ஒரு நாளில் ஏற்படும் விபத்துகளில் 14 வயதுக்கு உட்பட்ட 20 சிறார் கள் பலியாகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ‘சேவ் லைப் பவுண்டே சன்’ தலைவர் பியூஷ் திவாரி கூறியபோது, பல்வேறு நாடுகளில் பஸ், கார்களில் செல்லும் குழந்தை களின் பாதுகாப்புக்காக சிறப் புச் சட்டங்கள் அமலில் உள்ளன. சீனாவில் பயணத்தின்போது குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக அந்த குழந்தைகளுடன் வரும் பெரிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இந்தியாவிலும் இது போன்ற பாதுகாப்பு நடைமுறை கள் பின்பற்றப்பட வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.

வாகனங்களில் பள்ளி செல்லும் குழந்தை களின் பாதுகாப்புக்கு முக்கியத்து வம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசு கள் உரிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று சமூக நல அமைப்புகள் வலியுறுத்தி யுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x