Last Updated : 28 Jan, 2015 08:27 PM

 

Published : 28 Jan 2015 08:27 PM
Last Updated : 28 Jan 2015 08:27 PM

அகாடமி திறப்புவிழாவிற்கு மோடியை அழைத்த மேரிகோம்

குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் இன்று தன்னைச் சந்தித்து மணிப்பூரில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தனது அகாடமி திறப்புவிழாவில் கலந்துகொள்ள அழைப்புவிடுத்ததாக குறிப்பிட்டு இன்று டிவிட்டரில் புகைப்படங்களைபிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மேரிகோம் கூறியதாவது: நான் செவ்வாய்க்கிழமையே அவரை சந்திக்க முயன்றேன். அவர் என்னை புதன்கிழமை சந்திக்க தயாராக இருப்பதாகக் கூறினார். அதன்படி அவருடனான சந்திப்பு நன்றாகவே அமைந்தது.

மணிப்பூரில் எனது அகாடமி திறப்புவிழாவில் கலந்துகொள்ள அவரை அழைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அகாடமியின் கட்டிடப் பணிகள் ஏப்ரலில்தான் நிறைவடைகின்றன. தங்களுக்கு எப்போது நேரம் கிடைக்குமோ அதை தாங்கள் கூறியபிறகே திறப்புவிழா குறித்த பணிகள் தொடங்கப்படும் என நான் அவரிடம் கூறினேன். அவரும் தன்னுடைய அளவில் அதை சிறப்பாக செய்வதாக உறுதியளித்தார்.

அவர் என்னை சிறப்பாக உபசரித்தார். அவரைச் சந்தித்த பிறகு அவர் மீதான மரியாதை பலமடங்கு உயர்ந்துவிட்டது. அவர் மிகவும் இதமானவர். நான் எப்போது வேண்டுமானாலும் அவரை அணுகலாம் என அவர் கூறியபோது நான் அவருடைய மகளைப் போல உணர்ந்தேன். அவரும் ஒரு மகளாக என் வீட்டுக்கு எப்போதுவேண்டுமானாலும் வரலாம் என்று கூறினார். அவருடனான சந்திப்பு வெகு சிறப்பாக அமைந்துவிட்டது என்றார்.

இதுகுறித்து மோடி தனது டிவிட்டரில், ஐந்துமுறை உலகச் சாம்பியனாக வெற்றிபெற்றவர் மேரிகோம், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கமும் பெற்றிருக்கிறார். அவர் கூறியதை ஆர்வமாகக் கேட்ட நான் அவருக்குத் தேவைப்படும்போது எல்லா உதவிகளையும் சிறப்பாக செய்வதாகக் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.







































FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x