Last Updated : 23 Jun, 2016 10:15 AM

 

Published : 23 Jun 2016 10:15 AM
Last Updated : 23 Jun 2016 10:15 AM

செல்பி எடுக்கும்போது விபரீதம்: கங்கையில் மூழ்கி 7 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கலோனல்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சிவம் (19). இவர் கான்பூர் மாவட்டத்தின் ஜுகி பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான சச்சின் குப்தா (21), போலு திவாரி (20), ரோஹித் (20), மக்சூத் (31), போலா (16) சத்யம் (24) ஆகிய 6 பேருடன் நேற்று கங்கை நதியில் குளிக்கச் சென்றார்.

சமீபத்திய மழை காரணமாக நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் நதியில் குளித்துக் கொண்டிருந்த சிவம், நீரோட்டம் அதிகமுள்ள பகுதியில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அவர் நிலைதடுமாறி விழந்ததில் நீரில் மூழ்கத் தொடங்கினார். இதையடுத்து அருகில் இருந்த மக்சூத் அவரை காப்பாற்ற முயன் றார். அவரும் நீரில் மூழ்கவே, நண்பர்கள் அடுத்தடுத்து ஒவ் வொருவராக நீரில் குதித்தனர். இந் நிலையில் 7 பேரும் நீரில் மூழ்கினர்.

தகவலின் பேரில் இளைஞர் களை மீட்க நீர்மூழ்கி வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு 7 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x