Published : 14 Jul 2018 08:08 AM
Last Updated : 14 Jul 2018 08:08 AM

ட்விட்டர் சமூக வலைதளத்தில் பிரியங்கா சோப்ரா பக்கத்தை தவறுதலாக இணைத்த காங்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுமத்தியில் ஆட்சியில் இருந்தபோதே 1,141 மண் பரிசோதனை ஆய்வகங்கள் நாட்டில் செயல்பட்டு வந்தன என்றும், இந்த விவகாரத்தில் மோடி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்றும் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று பிரச்சாரம் செய்தது. பின்னர் அந்தப் பக்கத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதியின் பக்கத்துடன் இணைப்பதற்குப் பதிலாக நடிகை பிரியங்கா சோப்ராவின் பக்கத்துடன் இணைத்துவிட்டது. பின்னர் தவறை உணர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அந்தப் பக்கத்தை நீக்கிவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x