Last Updated : 13 Jul, 2018 07:56 AM

 

Published : 13 Jul 2018 07:56 AM
Last Updated : 13 Jul 2018 07:56 AM

கட்டணம் செலுத்தாததால் குழந்தைகள் சிறை வைப்பு: பள்ளிக்கு முதல்வர் கேஜ்ரிவால் எச்சரிக்கை

கட்டணம் செலுத்தாத காரணத்தால் எல்கேஜி குழந்தைகளை சிறை வைத்த பள்ளி நிர்வாகத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

டெல்லியில் உள்ள ஹவுஸ் காஸி பகுதியில் அமைந்துள்ளது ராபியா பப்ளிக் பள்ளி. இந்தப் பள்ளியில் எல்கேஜி பயிலும் 16 குழந்தைகள் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், பள்ளிக் கட்டணம் செலுத்தாத காரணத்தால், நிர்வாகம் இத்தகைய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் போலீஸாரிடம் சில பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் நேற்று சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அப்பள்ளி முதல்வரிடம் இதுகுறித்து கேஜ்ரிவால் கேட்டறிந்தார்.

அப்போது, குழந்தைகளை சித்திரவதை செய்யும் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் டெல்லி அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்தார்.

இதுகுறித்து போலீார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x