Last Updated : 12 Jul, 2018 08:10 AM

 

Published : 12 Jul 2018 08:10 AM
Last Updated : 12 Jul 2018 08:10 AM

மாவோயிஸ்ட்கள் 2 பேர் சத்தீஸ்கரில் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட போலீஸ் எஸ்.பி. அபிஷேக் மீனா நேற்று கூறியதாவது:

மாவட்டத்திலுள்ள சிந்தகுபா போலீஸ் நிலையத்திலிருந்து ரிசர்வ் போலீஸ் படையினர் நேற்று முன்தினம் மின்பா கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது மாவோயிஸ்ட்கள், சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியை வெடிக்கச் செய்தனர். இதில் ஒரு ரிசர்வ் போலீஸ் படை வீரர் காயமடைந்தார். இதையடுத்து மாவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் ஹுக்கா மற்றும் உய்க்கா ஆகியோர் இறந்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

காயமடைந்த ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஹுர்ரா, ராய்ப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x