Published : 11 Jul 2018 05:42 PM
Last Updated : 11 Jul 2018 05:42 PM
தன்னால் லட்சியத்தை அடையமுடியவில்லை என்ற விரக்தியில் ஒரு மோட்டார் சைக்கிள் ரேஸ் பெண் பயிற்சியாளர் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று மாலை மஹாராஷ்டிராவின் மும்பை அருகே நடந்துள்ளது.
இதுகுறித்து திந்தோஷி காவல்நிலைய மூத்த ஆய்வாளர் ராஜாராம் வன்மானே தெரிவித்ததாவது:
’’மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த கோரெகானைச் சேர்ந்தவர் செட்னா பண்டிட் (27). இவர் தனது சகோதரருடன் வசித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் கோச்சாக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு இவரது சகோதரர் வெளியே சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. செட்னாவின் சகோதரர் வீடு திரும்பியிருந்தபோது தனது சகோதரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனே அவர் காவல் நிலையத்திற்கு ஓடிவந்து புகார் அளித்தார்.
தற்கொலைக்கான காரணக் குறிப்பும் சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் எழுதி வைத்துள்ள வாக்குமூலத்தில் தான் ஒரு லட்சியப் பெண் என்னும், தன்னால் இந்த நிமிடம் வரை தனது இலக்குகளை எட்டி சாதிக்க இயலாத நிலையே தொடர்ந்து நிலவி வருவதால் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் தனது சாவுக்கு வேறு யாரும் காரணம் அல்ல என்பதையும் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த திடீர் உயிரிழப்பு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழககு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.’’
இவ்வாறு காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT