Last Updated : 24 Jun, 2018 09:58 AM

 

Published : 24 Jun 2018 09:58 AM
Last Updated : 24 Jun 2018 09:58 AM

உச்ச நீதிமன்ற வழக்கில் விதவைகள் உரிமைகளுக்காக உறுதியாக வாதிடுவோம்: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

விதவைகள் உரிமைகளுக்காக உச்ச நீதிமன்றத்தில் உறுதியாக வாதிடுவோம் என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

சர்வதேச விதவைகள் தினத்தை முன்னிட்டு டெல்லியில் லூம்பா பவுண்டேஷன் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பங்கேற்றார்.

அவர் பேசும்போது, “நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து சட்ட அமைச்சகமும் சட்ட அமைச்சரும் விலகி இருக்கும். எனினும், விதிவிலக்காக, விதவைகளின் உரிமைகளுக்காக எனது துறை உறுதியான வாதங்களை முன்வைக்கும்” என்றார். நிகழ்ச்சியில் லூம்பா பவுன்டேஷன் தலைவரும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவியுமான செர்ரீ பிளேர் உட்பட பலர் பங்கேற்றனர். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிபுணர் குழு அமைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத 8 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அபராதம் விதித்தது. மேலும் விதவைகள் நலன் தொடர்பான பல சட்டங்களை ஒருங்கிணைத்து முழு சட்டம் இயற்றுவது குறித்து ஆராயுமாறும்உத்தரவிட்டது. இந்த வழக்கு ஜூலை 31-ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x