Published : 24 Jun 2018 09:53 AM
Last Updated : 24 Jun 2018 09:53 AM
கணினி மென்பொருள் பாதிப்பு காரணமாக நாடு முழுவதிலும் 23 ஏர் இந்தியா விமானங்களின் சேவையில் நேற்று தாமதம் ஏற்பட்டது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் இந்த பாதிப்பு இருந்தது.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எஸ்ஐடிஏ என்ற சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மென்பொருள் சேவை அளித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் இந்த மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கணினி செயல்பாடு முடங்கியது. இதனால் மதியம் 1 மணி முதல் 2.30 மணி வரை பயணிகளை விமானத்தில் அனுமதிப்பது உள்ளிட்ட பணிகள் ஆட்கள் மூலம் செய்யப்பட்டன. இதனால் ஏர் இந்தியாவின் 23 விமானங்கள் புறப்படுவதில் 15 முதல் 30 நிடமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT