Published : 20 Jun 2018 08:07 AM
Last Updated : 20 Jun 2018 08:07 AM
அருணாசலபிரதேசம், அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக அருணாசலின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பாலிபாரா - தவாங் நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது, அசாமையும், அருணாசலையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாகும். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT