Published : 19 Jun 2018 06:01 PM
Last Updated : 19 Jun 2018 06:01 PM
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான தங்கள் கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டதால் முதல்வர் பதவியை மெஹ்பூபா முப்தி ராஜினாமா செய்தார், இதனையடுத்து காஷ்மீர் பிரச்சினைக்கு பலப்பிரயோகம் தீர்வாகாது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பாஜக வெளியேறியது ஒன்றும் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக இல்லை என்று கூறிய மெஹ்பூபா, “நான் ஆளுநரிடம் வேறு எந்த கூட்டணிக்கும் முயற்சி செய்யப்போவதில்லை என்று கூறிவிட்டேன்” என்றார்.
“நான் எப்போதுமே கூறிவருவது ஒன்றுதான், பலப்பிரயோக ராணுவக் கொள்கை ஜம்மு காஷ்மீரில் ஒரு போதும் பயனளிக்காது என்பதே. சமரசம்தான் தீர்வு. இது பகைவர்கள் பிரதேசமல்லவே. அதிகாரத்துக்காகக் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை, இந்த கூட்டணிக்கு போர்நிறுத்தம் என்ற மிகப்பெரிய நோக்கு இருந்தது” என்றார்.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஃபி அகமட் மிர் கூறும்போது, “பாஜகவுடன் ஆட்சியை நடத்த எங்களால் முடிந்தவரை ஒத்துழைத்தோம், இது நடந்துதான் தீரும், ஆனால் இது எங்களுக்கு ஆச்சரியமே, ஏனெனில் கூட்டணி முறிவுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை அறிவிப்பும் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT