Last Updated : 14 Jun, 2018 05:44 PM

 

Published : 14 Jun 2018 05:44 PM
Last Updated : 14 Jun 2018 05:44 PM

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்தார், விவசாயிகளுக்கு ரூ. 2 கோடி: அமிதாப் உறுதி

பணியின்போது எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கும் ,விவசாயிகளுக்கும் ரூ.2 கோடி நிதி உதவி அளிக்க உள்ளதாக அமிதாப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் "ஆமாம் என்னால் முடியும், நான் விரும்புகிறேன் ..." என்று பொருள்படநிறைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

அமிதாப் பச்சன், எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடியும், விவசாயிகள் தங்கள் அடைக்கும்விதமாக அவர்களுக்கும் உதவும் வகையில் ரூ.1 கோடியும் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தனது ட்விட்டரில் இதுகுறித்து நிறைய தகவல்களை அவரே பதிவு செய்துள்ளார். அதன்படி தகுதி வாய்ந்தவர்களுக்கு இந்த உதவித்தொகைகள் போய்சேரும்விதமாக அதிகாரபூர்வ அமைப்புகளை பட்டியலிட்டுத் தர ஒரு குழுவையும் அவர் நியமித்துள்ளாதாகத் தெரிகிறது.

விவசாயிகளுக்கும் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்தாருக்கும் ஒரு பெரிய தொகைகை ஒதுக்கியிருப்பது குறித்து இந்த 75 வயது நடிருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x