Published : 14 Jun 2018 01:11 PM
Last Updated : 14 Jun 2018 01:11 PM

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 தீவிரவாதிகள் பலி

காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இந்திய பாதுகாப்புப் படை  நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் பலியாகினர். ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில், "காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்திய பாதுகாப்புப் படை தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் பலியாகினர்.

தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களும், அவர்களிடமிருந்த ஆயுதங்களும் கைபற்றப்பட்டுள்ளன. அவர்களின் அடையாளங்கள் கண்டறிப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டது.

பந்திபோராவில் தீவிரவாதிகளுக்கு எதிராக  தேடுதல் வேட்டை கடந்த சனிக்கிழமை பன்னார் பகுதியில் தொடங்கியதாகவும், அன்றுமுதல் ராணுவத்தினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர் என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x