Published : 14 Jun 2018 08:57 AM
Last Updated : 14 Jun 2018 08:57 AM
டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் முதல்வர் கேஜ்ரிவாலின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வளர்ச்சிப் பணிகள் பாதிப்பதாகவும் அதிகாரிகளைப் பணிக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் என்றும் கோரி ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை மாலை கேஜ்ரிவால் தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.
அவருடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது.
இதனிடையே, கேஜ்ரிவாலுக்கு போட்டியாக பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, எம்எல்ஏ மஜிந்தர் சிங் சிர்சா, ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ கபில் மிஸ்ரா ஆகியோர் முதல்வர் அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தை தொடங்கினர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதல்வர் கேஜ்ரிவால் நிறைவேற்றவில்லை என்றும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விஜேந்தர் குப்தா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT