Published : 14 Jun 2018 08:48 AM
Last Updated : 14 Jun 2018 08:48 AM

அரசு பங்களா சேதம்; பாஜக சதி செய்வதாக அகிலேஷ் குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உத்தரபிரதேசத்தில் முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களை காலி செய்தனர். இந்நிலையில் அகிலேஷ் யாதவ் தங்கியிருந்த பங்களாவின் சில பகுதிகள் உடைந்துள்ளதாகவும் சில பொருட்கள் காணவில்லையென்றும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ் நேற்று கூறியதாவது: நான் தங்கிய அரசு பங்களா சேதம் அடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சில ஊடகங்களின் துணையுடன் எனது புகழுக்கு பங்கம் விளைவிக்க பாஜக சதி செய்கிறது. ஊடகங்களுக்கு சேதமடைந்த பங்களாவைக் காட்டுவதற்கு முன்னதாக முதல்வரின் சிறப்பு அதிகாரி அபிஷேக், ஐஏஎஸ் அதிகாரி மிருதுஞ்செய் நரேன்அங்கு சென்றுள்ளனர். அது ஏன் என்பதை விளக்க வேண்டும். நான் பங்களாவை சேதப்படுத்தவில்லை. பொருட்கள் காணாமல் போனதாக சொல்கிறார்கள். அந்தப் பொருட்கள் எவை என்று சொன்னால் நான் அதைத் திருப்பித் தந்துவிடுகிறேன். அந்த பங்களாவுக்காக ரூ.42 கோடி செலவு செய்ததாகச் சொல்கிறார்கள். மேலும் பங்களாவில் நீச்சல் குளம் இருந்ததாகவும் சொல்கிறார். அங்கு நீச்சல் குளமே இல்லை.

இவ்வாறு அ்கிலேஷ் யாதவ்கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x