Published : 14 Jun 2018 08:46 AM
Last Updated : 14 Jun 2018 08:46 AM
பிரதமர் நரேந்திர மோடி இன்று சத்தீஸ்கர் செல்கிறார்.
பிலாய் நகரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இரும்பு உருக்கு ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிலாய் ஐஐடி.க்கான நிரந்தர வளாகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். கிராம பஞ்சாயத்துகளை கண்ணாடியிழை கேபிள் நெட்வொர்க் உடன் இணைக்கும் பாரத்நெட் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். ஜகதால்பூர் - ராய்ப்பூர் இடையே விமான சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர், பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு மடிக்கணினிகள், சான்றிதழ்கள் மற்றும் காசோலைகள் வழங்குகிறார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT