Published : 14 Jun 2018 08:43 AM
Last Updated : 14 Jun 2018 08:43 AM

குடியரசுத் தலைவர் 3 நாடுகளில் சுற்றுப் பயணம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாடுகளுக்கான 7 நாள் சுற்றுப் பயணத்தை வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளார்.

பயணத்தின் முதல்கட்டமாக ஐரோப்பிய யூனியனில் உள்ள கிரீஸ் நாட்டுக்கு செல்லும் ராம்நாத், அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இரண்டாம் கட்டமாக 19-ம் தேதி லத்தீன் அமெரிக்க நாடான சுரிநாமில் அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசுகிறார். 21-ம் தேதி அங்கு நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் இரு தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

அன்றே தினமே கியூபா செல்கிறார் ராம்நாத். அங்கு அதிபர் மிகுயெல் திசா கனெல் பெர்முடெசை சந்திக்கிறார். 1959 கியூபா புரட்சிக்குப் பிறகு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் கியூபா செல்வது இதுவே முதல் முறை. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x