Published : 13 Jun 2018 08:54 AM
Last Updated : 13 Jun 2018 08:54 AM
காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் நேற்று பேட்டியளித்த ராணுவ அதிகாரி லெப்டிணன்ட் ஜெனரல் ஏ.கே.பட் கூறுகையில், ‘‘ரம்ஜான் மாதத்ததை முன்னிட்டு காஷ்மீரில் மத்திய அரசு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. போர் நிறுத்தம் நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும். இந்த போர் நிறுத்த காலத்தில் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரியவில்லை. இது குறையும் என்று நம்புகிறோம். காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான்ஈடுபட்டு வருகிறது. இதைத் தடுக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT