Published : 13 Jun 2018 08:50 AM
Last Updated : 13 Jun 2018 08:50 AM

எதிர்வரும் தேர்தல்களில் மின்னணு வாக்கு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படலாம்: ஆந்திர முதல்வர் எச்சரிக்கை

ஆந்திரத் தலைநகர் அமராவதியில் தெலுங்கு தேசம் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கலாம். இதற்கு நாம் இடமளித்துவிடக் கூடாது.

இதுகுறித்து, மாநிலம் முழுவதிலும் உள்ள நமது கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எந்தவொரு மின்னணு சாதனத்திலும் பிரச்சினைகள் ஏற்படும். அதேபோல், அந்த சாதனங்கள் தவறுகள் செய்வதற்கேற்பவும் அவற்றை மாற்றியமைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x