Published : 12 Jun 2018 08:15 AM
Last Updated : 12 Jun 2018 08:15 AM
மத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள் பற்றிய செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, நாளை மத்திய அமைச்சர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளால் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், 7 மாதங்களுக்குப் பிறகு மத்திய அமைச்சர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பிரதமரின் ஜன் அவுஷதி யோஜனா (குறைவான விலையில் தரமான மருந்துகள்), ஆயுஷ்மான் பாரத் (மருத்துவ காப்பீடு), பிரதமரின் பசல் பீமா யோஜனா (பயிர் காப்பீடு), பிரதமரின் உஜ்வாலா யோஜனா (எரிவாயு இணைப்பு), ஸ்டார்ட் அப் பண்டிங் (தொழில் தொடங்கிடு), முத்ரா யோஜனா (குறுந்தொழில் நிதியுதவி) உள்ளிட்ட சில முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT