Published : 03 Jun 2018 07:34 AM
Last Updated : 03 Jun 2018 07:34 AM
உத்தரபிரதேசத்தில் நேற்று முன்தினம் வீசிய புழுதிப் புயலுக்கு 17 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கடுமையான புழுதிப் புயல் வீசியது. இந்தப் புழுதிப் புயல் காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும், மணிக்கு 50 கி.மீ. என்ற வேகத்தில் காற்று வீசியதால் பல இடங்களில் சிறிய வீடுகளும் இடிந்து விழுந்தன. குறிப்பாக, மொராதாபாத், சம்பல், முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களில் இந்தப் புழுதிப்புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் வீடுகள் இடிந்து விழுந்தது, மரங்கள் சாய்ந்தது போன்ற நிகழ்வுகளுக்கு இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தை கடந்த மாதம் 2-ம் தேதி முதல் மூன்று புழுதிப்புயல்கள் தாக்கியுள்ளன. இதில், அம்மாநிலத்தில் மொத்தம் 130 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT