Last Updated : 26 May, 2018 12:53 PM

 

Published : 26 May 2018 12:53 PM
Last Updated : 26 May 2018 12:53 PM

காஷ்மீரில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 4 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், "காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இன்று (சனிக்கிழமை) அத்துமீறி தீவிரவாதிகள் நுழைய முயன்றனர். அப்போது இந்திய பாதுகாப்புப் படையினர்  துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்றார்.

தீவிரவாதிகளுடனான இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் நடத்தி வருகின்றனர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x