Published : 21 May 2018 07:42 PM
Last Updated : 21 May 2018 07:42 PM
உ.பி.மாநிலத்தின் மூத்த அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார், அரசியல் எதிரிகளின் பேரணிகளில் கலந்து கொள்பவர்களுக்கு மஞ்சள்காமாலை நோய் பீடிக்கும் என்றும் தன் அருள் கிடைத்தால் மட்டுமே அது குணமடையும் என்றும் ‘சாபம்’ விடுத்துள்ளது பரபரப்பாகியுள்ளது.
சுஹெல்தேவ் பாரத் சமாஜ் கட்சியின் தலைவராவார் ஓம்பிரகாஷ் ராஜ்பார். ஞாயிறன்று மது ஒழிப்புப் பேரணி ஒன்றில் கலந்த் கொண்டு பேசும்போது, “எனது கட்சியின் அறிவிப்பு இன்றி, அனுமதியின்றி வேறு எந்தக் கட்சியின் பேரணியிலும் கலந்து கொள்ளக் கூடாது. அப்படி யாராவது மீறி பிற கட்சிகளின் பேரணியில் கலந்து கொண்டால் அவர்கள் என் சாபத்துக்கு ஆளாவார்கள். மீறுபவர்களை மஞ்சள்காமாலை நோய் தாக்கும். பிறகு என் ஆசீர்வாதம் என்ற மருந்து மட்டும்தான் அவர்களுக்கு குணமளிக்கும்” என்று பேசினார்.
நரேந்திர மோடி உ.பி.க்கு குஜராத் மாதிரி வளர்ச்சி என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார், அதற்கு முதற்கட்டமாக இங்கு மது ஒழிப்பை அமல் படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் கருத்து வேறுபாடு உள்ளதே என்று கேட்டதற்கு, “இல்லவே இல்லை, அவர்தான் என் கேப்டன், அவரைத்தான் பின்பற்றுகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT