Published : 19 May 2018 07:22 AM
Last Updated : 19 May 2018 07:22 AM

பாஜக தோல்வி அடையும்: அபிஷேக் சிங்வி நம்பிக்கை

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய அரசு அமைவதில் ஆளுநரின் பங்கு என்ன? அரசியல் சட்டப்படி அவர் எந்தக் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்ற கேள்வி முதல்முறையாக எழுந்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு சனிக்கிழமை நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியபோது, 15 நாள் அவகாசமே போதாது என எடியூரப்பா தரப்பில் கூறினர்.

பிறகு 10 நாள் அவகாசமும், அதன் பிறகு 7 நாள் அவகாசமும் கேட்டனர். இறுதியாக திங்கள்கிழமைக்கு முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டாம் என வற்புறுத்தினர். இது பாஜக.வின் பயத்தையே காட்டுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த பாஜக கோரியது. இதையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆட்சி அமைக்க எடியூரப்பா காட்டிய மூர்க்கத்தனத்தை இதற்கு முன் நான் எங்கும் பார்த்ததில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தோல்வி அடையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x