Last Updated : 17 May, 2018 11:47 AM

 

Published : 17 May 2018 11:47 AM
Last Updated : 17 May 2018 11:47 AM

எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு: காங்.தலைவர்கள், தேவகவுடா, குமாரசாமி சட்டப்பேரவை அருகே தர்ணா, சாலை மறியல்

கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை அருகே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த தர்ணா போராட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்டோரும் ஈடுபட்டனர்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. அதேசமயம், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைக்க காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின.

இந்த சூழலில் நேற்று இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளூநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதல்வராகப் பதவி ஏற்றார்.

எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பை நிறுத்திவைக்கக் கோரி நேற்று நள்ளிவரவு காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விடிய விடிய நடந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடைவிதிக்க உச்ச நீதின்றம் மறுத்துவிட்டது. ஆளுநரிடம் தாக்கல் செய்த எம்எஎல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை இன்று தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் உள்ள விதான்சவுதா அருகே உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி உள்ளிட்டோரு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களோடு சேர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களும் தர்ணாபோராட்டத்திலும, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், விதான் சவுதா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதைப் படிக்க மறந்துடாதீங்க......

‘ரைஸ் மில் கிளார்க்’ முதல் முதல்வர் பதவி வரை: எடியூரப்பா ஒரு பார்வை :தென் மாநிலத்தில் மீண்டும் பாஜக

எடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x