Published : 17 May 2018 07:57 AM
Last Updated : 17 May 2018 07:57 AM
கர்நாடக தேர்தலில் பாஜகவின் போட்டியை சமாளிக்கும் வகையில் காங்கிரஸ் கடந்த நவம்பர் 27-ம் தேதி, 'வீடு வீடாக பிரச்சாரம்' செய்யும் திட்டத்தை தொடங்கியது.
ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் கர்நாடக மாநிலத்துக்கு வந்த ராகுல் காந்தி 'மக்கள் ஆசி பயணம்' மூலம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்துத்துவ எதிர்ப்பு, ஆர்எஸ்எஸ் செயல்பாடு ஆகியவற்றை விமர்சித்த ராகுல் காந்தி 30 மாவட்டங்களிலும் உள்ள பெரிய மடங்கள், கோயில், மசூதி, கிறிஸ்துவ ஆலயம் ஆகியவற்றுக்கு சென்று வழிபட்டார்.
ஆனால், இந்துத்துவத்தை விமர்சித்துவிட்டு, கோயில் கோயிலாக சென்றதை மக்கள் நம்பவில்லை. கோயில் கோயிலாக ராகுல் காந்தி சுற்றியும் இந்த முறை 78 இடங்களையே பிடித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT