Published : 17 May 2018 07:52 AM
Last Updated : 17 May 2018 07:52 AM

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலிடம் போலீஸ் விசாரணை

டெல்லியில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டார்.

இது தொடர்பாக அன்ஷூ பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் ஏற்கெனவே, 11 எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கேஜ்ரிவாலிடம் டெல்லி போலீஸார் நாளை விசாரணை நடத்த உள்ளனர். இதுகுறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 18-ம் தேதி காலை 11 மணிக்கு கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x