Published : 16 May 2018 08:17 AM
Last Updated : 16 May 2018 08:17 AM

ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார் சித்தராமையா

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில் நேற்று தேர்தல் இறுதி முடிவு வெளிவருவதற்கு முன்பு ஆளுநர் வஜுபாய் வாலாவை முதல்வர் சித்தராமையா சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

கர்நாடக தேர்தலில் சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் சித்தராமையா போட்டியிட்டார். இவற்றில் பாதாமி தொகுதியில் மட்டும் அவர் வெற்றி பெற்றார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் படுதோல்வி அடைந்தார்.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x