Published : 16 May 2018 08:09 AM
Last Updated : 16 May 2018 08:09 AM
காங்கிரஸ் கட்சியின் பிரிவினை அரசியலை கர்நாடக மக்கள் நிராகரித்துள்ளனர் என்று மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியபோது, “சிலர் (ராகுல் காந்தி) பிரதமர் கனவில் மிதக்கின்றனர். அவர்களுக்கு கர்நாடக மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்” என்றார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவாக கர்நாட மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை அவர்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்” என்றார். “காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கோஷம் தற்போது நிஜமாகி வருகிறது” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT