Published : 13 May 2018 09:47 AM
Last Updated : 13 May 2018 09:47 AM

அமித் ஷா கார் மீது தாக்குதல்: சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் கார் மீது தாக்குதல் நடைபெற்ற விவகாரத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அம்மாநில பாஜக மேலவை உறுப்பினர் சோம வீரராஜு வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு தனது குடும்பத்தினருடன் வந்த அமித் ஷாவின் கார் மீது தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், ஆந்திர மாநில மேலவை உறுப்பினருமான சோம வீரராஜு கூறுகையில், “அமித் ஷா காரின் மீது நடந்த தாக்குதலுக்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு தேசியக் கட்சியின் தலைவருக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க மாநில அரசு தவறிவிட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x