Published : 17 Apr 2018 08:48 AM
Last Updated : 17 Apr 2018 08:48 AM
சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கதுவா, உன்னாவ் பலாத்கார சம்பவங்கள் நாடு முழுவதிலும் கொந்தளிபை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறுமிகள் பலாத்காரம் தொடர்பாக 2016-ம் ஆண்டில் 19,675 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது வெட்கக்கேடானது. நமது மகள்களுக்கு நியாயம் வழங்குவதில் பிரதமர் உண்மையிலேயே தீவிரமாக இருப்பாரேயானால் இந்த வழக்குகளை விரைவுபடுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கதுவா, உன்னாவ் சம்பவங்களில் நமது மகள்களுக்கு நியாயம் வழங்குவோம் என்று பிரதமர் மோடி கடந்த வாரம் கூறியநிலையில் ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கடந்த வாரம் மேலும் கூறும்போது, “இதுபோன்ற குற்றங்கள் சமூகநீதி கொள்கைக்கு சவாலாக உள்ளன. ஒரு சமூகம், ஒரு நாடு என்ற முறையில் நாம் அவமானம் அடைந்துள்ளோம். இந்த தீங்கை முடிவுக்கு கொண்டுவர இணைந்து பணியாற்றுவோம்” என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT