Published : 16 Apr 2018 05:40 PM
Last Updated : 16 Apr 2018 05:40 PM
இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதால், கேரளாவில் மூன்று இடங்களில் சைபர் காவல் நிலையங்கள் அமைப்பதென கேரள அரசு இன்று முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இணையதள குற்றங்கள் பெருகி வருவதால், எர்ணாக்குளம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய மூன்று இடங்களில் சைபர் காவல் நிலையங்கள் அமைப்பதென கேரள அரசு இன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இணையதளக் குற்றங்களை தடுக்கவும், அதன்மீதான உடனுக்குடனான விசாரணையை உறுதி செய்வதற்காக சிறப்புப் பிரிவு உருவாக்கப்படுகிறது. ஒரு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 18 காவல்துறையினரை கொண்டு இந்த சைபர் காவல்நிலையம் அமைக்கப்படும்.
இவ்வாறு கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT