Published : 16 Apr 2018 09:51 AM
Last Updated : 16 Apr 2018 09:51 AM

விமானத்தைப் போல ரயில்களில் நவீன கழிப்பறை

பயோ டாய்லெட்டுக்கு பதிலாக விமானங்களில் இருப்பதைப்போல ரயில்களிலும் நவீன கழிப்பறை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தின்போது மலம் உள்ளிட்ட கழிவுகள் வெளியில் விழுவதை தடுக்க ரயில்களில் பயோ டாய்லெட் எனப்படும் உயிரி கழிவறை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கழிவறைகளில் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை பயணிகள் போட்டால் அவை அடைத்துக் கொள்கின்றன. இதனால் ரயிலில் துர்நாற்றம் வீசி, பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதையடுத்து ரயில்களில் பயோ டாய்லெட்டுக்கு பதிலாக விமானங்களில் இருப்பது போல, உறிஞ்சும் தன்மை கொண்ட நவீன கழிப்பறைகள் ‘வேக்கும் டாய்லெட்’ (vacuum toilets) ஏற்படுத்தப்பட உள்ளது.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரயில்களில் பயோ டாய்லெட்டுகள் அடைத்துக் கொண்டு துர்நாற்றம் வீசுவதால் உறிஞ்சும் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. பயோ டாய்லெட்டை பயன்படுத்த 10 முதல் 15 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் ‘வேக்கும் டாய்லெட்’க்கு அரை லிட்டர் தண்ணீர் போதுமானது. உறிஞ்சும் கழிப்பறைகளால் துர்நாற்றம் வீசும் பிரச்சினை இருக்காது. சதாப்தி, ராஜதானி உட்பட 13 ரயில்களில் முதல்கட்டமாக ‘வேக்கும் டாய்லெட்’ அமைக்கப்படும். விரைவில் மற்ற ரயில்களிலும் அமைக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x